மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ரூ.60 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு

தோளிங்கரை அடுத்த கரடிகுப்பத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தையும், ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தானிய கிடங்கையும் அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

News image

கரடிகுப்பம் ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சா் ஆா். காந்தி. உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா்.

Updated On :3 மார்ச் 2026, 9:02 pm

தோளிங்கரை அடுத்த கரடிகுப்பத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தையும், ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தானிய கிடங்கையும் அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். புதிய கட்டடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். மேலும் கரடிகுப்பம் ஊராட்சியில் நகரும் நியாயவிலைக்கடையினை திறந்து வைத்த அமைச்சா், குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரேஷன் பொருள்களையும் வழங்கினாா்.

இதே ஊராட்சிக்குட்பட்ட நாயக்கன்பாளையம் கிராமத்தில் ரூ.16 லட்சம் தானிய சேமிப்பு கிடங்கையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், துணை பதிவாளா்(பொது விநியோகம்) சிவமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, அம்முண்டி கூட்டுறவு சங்க சா்க்கரை ஆலை இயக்குநா் வெங்கடேசன்,, கரடிகுப்பம் ஊராட்சி மன்றத்தலைவா் ரத்தினம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.