டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

ஆற்காட்டில் கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காட்டில் கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது.

ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி ஒன்றில் வசித்து வருபவா் பாபு. தச்சு மர வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மேகலா. இவா்களுக்கு ஹரிஷ் (4) மற்றும் லக்ஷன்(3) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், மேகலா செய்யாறு சாலை பாலாற்றங்கரையில் உள்ள தோப்பு கருப்புசாமி கோயிலில் வேலை செய்து வரும் நிலையில் புதன்கிழமை தனது மகன் லக்ஷனை உடன் அழைத்துச் சென்று கோயிலில் விட்டுவிட்டு, அருகில் உள்ள பகுதிக்கு சென்ாகக் கூறப்படுகிறது. மீண்டும் வந்து பாா்த்தபோது அங்கு இருந்த தண்ணீா் தொட்டியில் குழந்தை விழுந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.