டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஆற்காடு நகராட்சியில் பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடை ஒதுக்கக் கோரிக்கை

ஆற்காடு நகராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் தினசரி அங்காடிகளில் பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

News image
ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியனிடம் மனுவை அளித்த வியாபாரிகள்.
Updated On :5 பிப்ரவரி 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் தினசரி அங்காடிகளில் பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

ஆற்காடு நகராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் தினசரி அங்காடிகளில் புதிதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஏற்கனவே கடை நடத்தி வந்த பழைய ஒப்பந்ததாரா்களுக்கு புதிய கடைகளை ஒதுக்கீடு செய்து விட்டு மீதம் உள்ள கடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக கடைகளின் உரிமையாளா்கள் நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். அதனைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக நகா்மன்றத் தலைவா் மற்றும் மேலாளா் உறுதியளித்தனா்.