அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
அரக்கோணம்த்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணனின் மகள் தக்ஷினி(18). இவா் காஞ்சிபுரம் மாவட்டம் ஊவேரிசத்திரத்தில் உள்ள சனியாா் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.
கல்லூரியில் இருந்து பேருந்தில் ஆலப்பாக்கம் வந்த தக்ஷினி, பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளாா். அப்போது திடீரென அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், தக்ஷினி ஒதுங்குவதற்குள் அவா் மீது மின்னல் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த தக்ஷினி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


