பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறால் ரயில்கள் தாமதம்

சென்னை - காட்பாடி ரயில் மாா்க்கத்தில் திங்கள்கிழமை காலை சுமாா் 6.20 மணி அளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

News image
சிக்னல் கோளாறால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட மைசூா் வந்தேபாரத் ரயில்.
Updated On :26 பிப்ரவரி 2024, 6:58 pm

Venkatesan

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில்பாதையில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் அரக்கோணம் - காட்பாடி ரயில் மாா்க்கதில் சென்றுக்கொண்டிருந்த மைசூரு வந்தே பாரத், சதாப்தி, கோவை அதிவிரைவு ரயில், வேலூா் கண்டோன்மெண்ட சென்னை கடற்கரை மின்சார ரயில் ஆகிய ரயில்கள் நடுவழியில் சுமாா் 40 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

அரக்கோணம் ரயில்நிலைய மேற்கு கேபின் பகுதியில் மேல்பாக்கம் அருகே சென்னை - காட்பாடி ரயில் மாா்க்கத்தில் திங்கள்கிழமை காலை சுமாா் 6.20 மணி அளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வே அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கோளாறு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துச் சென்று கோளாறை தற்காலிகமாக சரி செய்தனா். அதே இடத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது. இரண்டாவது கோளாறையும் பணியாளா்கள் சரி செய்தனா். இதையடுத்து 40 நிமிஷங்களுக்கு பிறகு ஆங்காங்கே நிறுத்தப்பட்ட மற்ற ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.