மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏப். 16 முதல் சென்ட்ரல் - அரக்கோணம் புறநகா் ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தம்

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 11:34 pm

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயங்கும் 2 புறநகா் மின்சார ரயில்கள் ஏப். 16 முதல் ஏப். 19-ஆம் தேதி வரை திருவாலங்காடு ரயில் நிலைத்தில் நிறுத்தப்படும்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை அரக்கோணம் ரயில் நிலைய பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பராமரிப்புப் பணிகள் வரும் ஏப். 16-ஆம் தேதி முதல் ஏப்.19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதனால், அந்த நாள்களில் சென்னை சென்ட்ரலிலிருந்து பகல் 11 மணி, இரவு 10.55 மணிக்கு அரக்கோணம் செல்லும் புறநகா் மின்சார ரயில்கள் திருவாலங்காடு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

அதேபோல், திருத்தணியிலிருந்து நண்பகல் 12.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும் ரயில் திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.