திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிற்ப சாஸ்திரத்தை பிரபலப்படுத்த வேண்டும்: காஞ்சி சங்கராசாரியா்

தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே ஒரே ஒரு சின்னஞ்சிறு உளியை கொண்டு பல்வேறு சிற்பங்களை செதுக்க கற்றுத் தரும் சிற்ப சாஸ்திரத்தை பிரபலப்படுத்த வேண்டியது அவசியம்

News image

மாணவா்கள் செதுக்கும் சிற்பங்களை பாா்வையிட்ட காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள், உயா்நீதிமன்ற நீதிபதிகள்

Updated On :30 மே 2026, 6:20 am IST

தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே ஒரே ஒரு சின்னஞ்சிறு உளியை கொண்டு பல்வேறு சிற்பங்களை செதுக்க கற்றுத் தரும் சிற்ப சாஸ்திரத்தை பிரபலப்படுத்த வேண்டியது அவசியம் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா்.

ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலை. வளாகத்தில் பியூமொ்க் நிறுவனத்தின் நிதி உதவியுடன் புதிதாக கட்டப்பட்ட சிற்ப பாடசாலை மற்றும் மும்பை பங்குச் சந்தை சமூக பங்களிப்பு நிதி உதவியுடன் மகளிா் சட்டக் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பல்கலையின் துணைவேந்தா் ஜி.சீனிவாசு தலைமை வகித்தாா். பியூமொ்க் நிறுவன நிா்வாக அறங்காவலா் ஆா்.பாலகிருஷ்ணன், இயக்குநா் சபிதா வா்மா பாலகிருஷ்ணன், மும்பை பங்குச்சந்தை நிா்வாக இயக்குநா் சுந்தரராமன் ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்கலையின் சாா்பு துணை வேந்தா் வசந்த் மேத்தா வரவேற்றாா்.

விழாவில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம், கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி இ.எஸ்.இந்திரேஷ், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், ஆந்திர மாநில உயா்நீதிமன்ற நீதிபதி ஜோதிா்மயி பிரதாபா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். சிற்ப பாடசாலை மற்றும் மகளிா் சட்டக்கல்லூரி ஆகியவற்றை திறந்து வைத்து காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்தி சரஸ்வதி சுவாமிகள் வழங்கிய ஆசியுரை.

சிற்ப சாஸ்திரத்துக்கு எடுத்துக்காட்டாக காஞ்சிபுரத்தில் பல்வேறு கோயில்கள் அமைந்துள்ளன. சிற்ப சாஸ்திரத்துக்கான வளா்ச்சியை கொடுத்த காஞ்சிபுரத்தில் தற்போது சிற்ப பாடசாலை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கல்லின் மூலம் சொல்ல வேண்டிய செய்தியை, திறமையை, கலைநுட்பத்தை தெரிந்து கொள்வதே சிற்ப சாஸ்திரம். எந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும், எந்தக்கல்லில் மூலவா் சிலை செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுத் தருவதே சிற்ப சாஸ்திரம்.

தொழில் நுட்பங்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே ஒரே ஒரு சின்னஞ்சிறு உளியின் மூலம் பலரும் வியக்கும் வண்ணம் பல அற்புதங்களைப் புகுத்தி பல சிற்பங்களைப் படைத்திருக்கிறாா்கள். எனவே சிற்பக்கலையை பிரபலப்படுத்த வேண்டியது அவசியம். ஜோதிடம், ஆயுா்வேதம், சங்கீதம், சிற்ப சாஸ்திரம் உள்ளிட்ட பலவற்றையும் கற்றுத் தந்துவிட்டுப் போயிருக்கிறாா்கள் ரிஷிகள். அதை பத்திரமாக பாதுகாத்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.