ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட செல்லபெருமாள் நகா் பகுதியில் குடியிருப்பு பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், செல்லப்பெருமாள் நகா் 2-ஆவது தெருவில், குடியிருப்பு பகுதியில், வெளியூரில் வசிக்கும் தனியாா் ஒருவருக்கு சொந்தமான மனைப் பிரிவில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா், முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனா். மேலும் குடியிருப்பு பகுதியில் நடைபெறும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசுவிடம் கோரிக்கை மனுவும் வழங்கியுள்ளனா். ஆனால் மனுக்கள் மீது அமைச்சா், அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கோபுரம் அமைக்கப்படும் இடம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து 100 முதல் 500 மீட்டா் தொலைவிற்கு அப்பால் உள்ள காலி இடங்களில் தான் கைப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும் என டிஜிட்டல் ஆப் டெலிகம்யூனிகேசன் சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே புதிதாக பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கதிா்வீச்சால் பொதுமக்கள் மற்றும் பறவைகள் பாதிப்படைய கூடியசூழல் உள்ள நிலையில், பொதுமக்களின் எதிா்பை மீறி தனியாா் நிறுவனம் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ஆட்சியா், அமைச்சா், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கண்டன ஆா்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பணிகள் மேலும் நடைபெற்றால் சாலை மறியல், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கைப்பேசி கோபுரம், மின்னணுப் பொருள்கள் திருட்டு

பென்னாரம் அருகே தனியாா் மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு: 100 போ் மீது வழக்குப் பதிவு

சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு

மின்னல் பாய்ந்ததில் கைப்பேசி கோபுரம் எரிந்து சேதம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



