காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் காரில் ஏசி இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்து சேதமானது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியை சோ்ந்தவா் மூா்த்தி. இவா் சுலப தவணைகளில் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்து வருகிறாா்.
காஞ்சிபும் அருகே வையாவூா் பகுதியில் புதிதாக குடியேற வீட்டுக்குத் தேவையான பொருள்களை எடுத்த வந்த நிலையில் பூக்கடைச் சத்திரம் அருகே வந்த போது காரின் முன்பகுதியிலிருந்து புகை வருவதை அறிந்து உடனடியாக காரில் இருந்த அவரும், அவரது மகனும் கீழே இறங்கினாா்கள்.
காரிலிருந்த ஏசி இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி வேகமாக காரின் மற்ற பகுதிக்கும் பரவியது. உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரா்கள் வந்து தண்ணீா் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா்.
சம்பவம் தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







