திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிக்னல் கோளாறு: மின்சார ரயில்கள் திடீா் நிறுத்தம்

News image
Updated On :8 மே 2026, 6:19 am IST

சிக்னல் கோளாறு காரணமாக வியாழக்கிழமை காலை 3 மின்சார (இமு) ரயில்கள் பேசின் பாலம் அருகே திடீரென நிறுத்தப்பட்டதால், பயணிகள் நடுவழியில் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விரைவு ரயில்கள் மற்றும் புகா் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் பேசின் பாலம் வழியாக கொருக்குப்பேட்டை சென்று பின்னா், அந்தந்தப் பகுதி தண்டவாளங்களில் செல்கின்றன.

பேசின் பாலம் பகுதியில் அமைக்கப்பட்ட ரயில் தண்டவாள சிக்னல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இதற்கிடையே பேசின் பாலம் அருகேயுள்ள தண்டவாள சிக்னலில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, கொருக்குப்பேட்டையிலிருந்து வந்த 3 இமு வகை புகா் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பணிகளுக்காக பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகள் கீழே இறங்கி தண்டவாளப் பகுதிகளில் நடந்து சென்ட்ரல் நிலையம் வந்தனா். இதனால், பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதனிடையே, காலை 10.18 மணிக்கு சிக்னல் கோளாரு சரி செய்யப்பட்டு ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.