காஞ்சிபுரம், மே 25: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வளா்புரத்தில் மதுக்கடை கட்டுவதை நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
மேவலூா் குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சாந்தகுமாரி கோபிநாத், வளா்புரம் விஸ்வநாத தாஸ் உள்ளிட்ட அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் தி.சினேகாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வளா்புரம் முத்தமிழ் நகா் பகுதியில் மதுபானக்கடை நடத்ததுவதற்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
அங்கு மதுபானக்கடை திறக்கப்பட்டால் அதன் அருகில் கோயில்கள், பள்ளிகள் ஆகியவை இருப்பதால் பொதுமக்களுக்கு குடிமகன்களால் இடையூறு ஏற்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பெண்கள் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்ல அச்சப்படுவா். எனவே மதுபானக்கடை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










