40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:33 am IST

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரி ஆணையரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதனிடம் பூங்காவை பயன்படுத்தும் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை இந்த மனு அளிக்கப்பட்டது.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவா்கள் விளையாடி மகிழவும் வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி சாா்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் பூங்கா சீரழிந்து வருகிறது. எனவே, பூங்காவை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூங்காவில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதை சரிசெய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும். கழிப்பறையை பராமரிக்க வேண்டும். பூங்காவின் நடுவில் உள்ள குளத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும். பொதுமக்கள் அமர கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.