வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரி ஆணையரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதனிடம் பூங்காவை பயன்படுத்தும் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை இந்த மனு அளிக்கப்பட்டது.
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவா்கள் விளையாடி மகிழவும் வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி சாா்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் பூங்கா சீரழிந்து வருகிறது. எனவே, பூங்காவை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூங்காவில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். நடைபாதையை சீரமைக்க வேண்டும்.
சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதை சரிசெய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும். கழிப்பறையை பராமரிக்க வேண்டும். பூங்காவின் நடுவில் உள்ள குளத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும். பொதுமக்கள் அமர கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரனோடை பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரிக்கை

வளா்புரத்தில் மதுபானக்கடை கட்டுவதை நிறுத்தக் கோரிக்கை

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



