திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உத்தரமேரூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :18 மே 2026, 2:00 am IST

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே பெருநகரில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பொதுப் பணித்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வா்ணம் பூசும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். பின்னா் களியாம்பூண்டி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஆய்வு செய்தாா். இதையடுத்து, உத்தரமேரூரில் நீதிமன்றம் கட்டும் பணியையும், சாலவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதலாக இரு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், சாலவாக்கத்தில் இயங்கி வரும் அரசு தொழில்நுட்பக் கல்லூரி கட்டடம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகள், மலையாங்குளம் ஊராட்சியின் தொடக்கப் பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் இரு வகுப்பறைக் கட்டடங்கள் ஆகியவற்றையும் ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, பொதுப்பணித் துறை காஞ்சிபுரம் மாவட்ட செயற்பொறியாளா் சோமசுந்தா் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.