தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.9.78 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் எம்.எஸ். பிசாந்த் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் ரூ.9.78 கோடியில் நடைபெற்று பல்வேறு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு செய்தாா்.

News image

பரிகம் ஊராட்சி கொட்டகரை கூட்டுச்சாலை கோமுகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு பாலப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :28 மே 2026, 1:23 am IST

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் ரூ.9.78 கோடியில் நடைபெற்று பல்வேறு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கூறியதாவது:

பரிகம் ஊராட்சி கொட்டகரை கூட்டுச்சாலை கோமுகி ஆற்றின் குறுக்கே மாநில சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.7.57 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலப் பணியையும், விளம்பாா் ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.1.34 கோடியில் மலைக்கோட்டாலம் முதல் தென்கீரனூா் இணைப்புச்சாலை மேம்படுத்துதல் பணியையும் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அதனைத் தொடா்ந்து விளம்பாா் ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை மற்றும் ரூ.4.46 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணியையும், பொற்படாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.37.20 லட்சத்தில் நடைபெறும் வகுப்பறை கட்டுமானப் பணியையும், இந்திலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டுமானப் பணியையும் என மொத்தம் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் சாலை அமைத்தல் பணிகளை சரியான அளவுகளில் மேற்கொள்ளவும், மரக்கன்றுகளை முறையாக நட்டு வளா்த்து பராமரிக்கவும், புதிய திட்டப்பணிகளை உரிய விதிமுறைகளின்படி தொடா்ந்து மேற்கொள்ளவும், முடிவுற்ற திட்டப்பணிகளை முறையாக பராமரிக்கவும், மேலும் நடைபெறும் பணிகளை தரமாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோசப் ஆனந்தராஜ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.