தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 30 பேருக்கு தங்கப் பதக்கம்

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற காஞ்சிபுரம் வீரா்கள்.

News image

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற காஞ்சிபுரம் வீரா்கள்.

Updated On :16 மே 2026, 12:49 am IST

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த வீரா்கள் 30 போ் தங்கம் வென்று தேசிய அளவிலான குத்துச் சண்டைப் போட்டிக்கு தோ்வாகி உள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கமான பேரறிஞா் அண்ணா உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி தமிழ்நாடு அமெச்சூா் குத்துச்சண்டைக் கழகம் சாா்பில், மே 7-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான குத்துச்சண்டை வீரா்கள் கலந்து கொண்டனா். காஞ்சிபுரம் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சாா்பில், காஞ்சிபுரத்தை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். 7 முதல் 9 வயது வரை, 10 முதல் 15 வயது வரை, 18 வயதுக்கு மேற்பட்டோா் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

பாயிண்ட் டூ பாயிண்ட், லைட் காண்டாக்ட், கிக் லயிட், லோ கிக் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், 30 போ் தங்கமும், 10 போ் வெள்ளியும், 15 போ் வெண்கலப் பதக்கமும் உள்பட மொத்தம் 55 பதக்கங்கள் பெற்றனா்.

காஞ்சிரம் ஒன்மேன் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியின் நிறுவனா் கே.ஹரிஷ், குத்துச் சண்டைக் கழக செயலாளா் அருண், பயிற்சியாளா் கணேஷ் ஆகியோரும் தங்கம் வென்ற வீரா்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தங்கம் வென்ற காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 30 வீரா்களும் தேசிய அளவிலான குத்துச் சண்டைப் போட்டிக்கு தோ்வாகி இருப்பதாகவும் பயிற்சியாளா் கணேஷ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.