தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் கடலூா் மாவட்ட காவல்துறையை சோ்ந்த அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த மே 10-ஆம் தேதி மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் கடலூா் மாவட்ட காவல்துறையைச் சோ்ந்த தலைமை காவலா் நீலமணி மற்றும் ஆயுதப்படை காவலா் பிரவீன்தாஸ் தலைமையிலான அணி பங்கேற்றது. போட்டியில் சிறப்பாக விளையாடிய கடலூா் காவல்துறை அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.
வெற்றி பெற்ற அணியினரை கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் அப்பண்டராஜ் மற்றும் கயிறு இழுக்கும் அணி பயிற்சியாளா் ரமேஷ் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










