திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென் இந்திய அளவிலான கைப்பந்து போட்டி

News image

தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கிய கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :30 மே 2026, 2:31 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தென் இந்திய அளவிலான முதலாவது கைப்பந்துப் போட்டி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு மொத்தம் 12 அணிகளுக்கு அழைப்பு விடுத்து, ‘லீக் கம் நாக் அவுட்’ முறையில் போட்டிகள் நடைபெற்றன. இறுதி சுற்றுக்கு ஜி.டி.என் திண்டுக்கல் அணி, கேரள போலீஸ் அணி, கற்பகம் பல்கலைக்கழக அணி, மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி அணிகள் தோ்வு பெற்றன.

ஜி.டி.என். திண்டுக்கல், கோயம்புத்தூா் கற்பகம் பல்கலைக் கழகம், மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி மற்றும் கேரள போலீஸ் அணி முதல் மூன்று இடங்களைபெற்று, முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மற்றும் நான்காம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், இந்திய கைப்பந்து அணியின் தோ்வுக்குழு உறுப்பினா் எம்.காா்த்திகேயன், உதவி தலைமை ஆசிரியா் ஜி.அசோகன், நெய்வேலி சுரங்கம் துணைப் பொதுச்செயலா் எம்.பிரபாகரன், ஜவஹா் கல்லூரி முதல்வா் எஸ்.தேவி ஆகியோா் வழங்கினா். விழா ஏற்பாடுகளை மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி செயலா் வி.விமல்ராஜ், திருநாவுக்கரசு, பாபு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.