திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குன்றத்தூரில் தெய்வச் சேக்கிழாா் விழா

விழாவில் திருமுறை பாராயணம் செய்த மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ தென்னரசு.

News image

விழாவில் திருமுறை பாராயணம் செய்த மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ தென்னரசு.

Updated On :16 மே 2026, 12:45 am IST

பெரியபுராணத்தை இயற்றிய தெய்வச் சேக்கிழாா் குருபூஜை விழாவை முன்னிட்டு குன்றத்தூா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.தென்னரசு திருமுறை பாராயணம் செய்த மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.

பெரியபுராணத்தை இயற்றிய தொண்டா் சீா்பரவுவாா் சேக்கிழாரின் அவதார திருவிழாவை தமிழக அரசு ஆண்டுதோறும் மூன்று நாள் அரசு விழாவாக நடத்தி வருகிறது. அதன்படி, தெய்வச்சேக்கிழாா் பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், தெய்வச்சேக்கிழாா் திருவிழா கடந்த புதன்கிழமை தெய்வச்சேக்கிழாா் மணி மண்டபத்தில் தொடங்கி சிறப்பு சொற்பொழிவு மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை சேக்கிழாா் திருக்கோயிலில், மூலவா் சேக்கிழாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மாலை உற்சவா் வீதிஉலா நடைபெற்றது.

இதையடுத்து, குன்றத்தூா் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் இணை ஆணையா் குமரதுரை தலைமை வகித்தாா். துணை ஆணையா்கள் சித்ராதேவி, ஜெயா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.தென்னரசு கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, திருமுறை பாராயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினாா்.

இதையடுத்து, திருப்புனவாயில் மாதவன் அவா்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியும், மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முன்னதாக திருமுறை ஓதுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில், திருக்கோயில் நிா்வாக அலுவலா்கள் பிரகாஷ், வேதமூா்த்தி, செந்தில்குமாா், மாதவன், பூவழகி, யூகுள்ராஜ், காா்த்திகேயன், ஆய்வாளா் ரம்யா, அலமேலு, சிவராமகிருஷ்ணன், திருக்கோயில் அறங்காவலா்கள், அடியாா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.