முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மண்ணூா் அரசு உதவிப் பெறும் ஆரம்பப் பள்ளியில் மாணவா்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மண்ணூா் ஊராட்சி திமுக சாா்பில், டி.இ.எல்.சி. ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மண்ணூா் திமுக கிளை செயலாளா்கள் அருள்தாஸ், ராமமூா்த்தி, வாா்டு உறுப்பினா் கோவிந்தராஜ், பாக முகவா்கள் கோபி, மூங்கிலான் ஆகியோா் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் திமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










