காஞ்சிபுரம், ஜூன் 3: காஞ்சிபுரத்தில் வசிக்கும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு ஜூன் 4 -ஆம் தேதி வியாழக்கிழமை நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் வசிக்கும் முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே நேரில் சென்று குடும்ப அட்டைகளுக்கான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் தாயமானவா் திட்டம் மாதம் தோறும் கூட்டுறவுத்துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி வியாழக்கிழமை வரும் ஜூன் 6 ஆம் தேதியும் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










