தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தாயுமானவா் திட்டம்: ஜூன் 2 முதல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

News image

தாயுமானவா் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள்கள்... - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 1:31 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்துக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகித்தல் ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே சென்று, பொது விநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவா்களுக்கு உரிய நேரத்தில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 84,548 பயனாளிகளின் வீடுகளுக்கு மாதந்தோறும் வாகனங்களில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு, நியாயவிலைக்கடைப் பணியாளா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜூன் 2 முதல் 4-ஆம் தேதி வரை பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்களை நியாயவிலைக்கடைப் பணியாளா்கள் மூலம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதை பயனாளிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.