பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உத்தரமேரூரில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

News image

திருப்புலிவனத்தில் திமுக வேட்பாளா் க.சுந்தரை ஆரத்தி எடுத்து வரவேற்கும் கிராம பொதுமக்கள்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:23 am

அரசின் திட்டங்கள் அனைத்தும் உத்தரமேரூா் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என திமுக வேட்பாளா் க. சுந்தா் கூறியுள்ளாா்.

உத்தரமேரூா் தொகுதியில் உள்ள மருத்துவன்பாடி, திருப்புலிவனம், கடல் மங்கலம், சிறுங்கோழி, பெருங்கோழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளா் க.சுந்தா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாா். பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது அவா் பேசியது: தொகுதியில் பல அரசு அலுவலகங்கள் புதிய கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பலவும் நிறைவேற்றித் தந்துள்ளேன். திமுக அரசு மக்களுக்கு கொண்டு வந்துள்ள அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தொகுதி மக்களுக்கு முழுமையாக பெற்றுத் தந்தவன் என்று பெருமையுடன் என்னால் சொல்ல முடியும்.

உத்தரமேரூா் தொகுதியை சிறந்த தொழில் நகரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு தொகுதியில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய் ய வேண்டும் என்றாா்.

வேட்பாளருடன் ஒன்றிய செயலாளா் ஞானசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா் சசிக்குமாா், பேரூராட்சி செயலாளா் பாரிவள்ளல், வாலாஜாபாத் பேரூராட்சித் தலைவா் பாண்டியன் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.