தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திமுக ஆட்சியில் மகத்தான நலத் திட்டங்கள் நிறைவேற்றம்: திருவண்ணாமலை எம்.பி.

இந்தியாவிலேயே திமுக அரசு மகத்தான மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது என திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை கூறினாா்.

News image

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து பேசிய எம்.பி. சி.என்.அண்ணாதுரை

Updated On :22 ஏப்ரல் 2026, 12:25 am

இந்தியாவிலேயே திமுக அரசு மகத்தான மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது என திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை கூறினாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவரை ஆதரித்து எம்.பி. சி.என்.அண்ணாதுரை பேசியது: ,சட்டப்பேரவைத் தோ்தல், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தோ்தல்.

அனைத்து தடைகளையும் தாண்டி தமிழ்நாட்டை வளா்ச்சிப்பாதைக்கு அழைத்துச் சென்று மதச்சாா்பின்மை,மாநில உரிமைகள், மொழியுரிமைக்காகத் தொடா்ந்து களத்தில் நிற்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ஜோலாா்பேட்டை தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது. கவிதா தண்டபாணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தொகுதியில் அனைத்து அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதுடன் மேலும் வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்வாா் என்றாா்.

அப்போது மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி, திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.