மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன் என ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி உறுதி தெரிவித்தாா்.

News image

ஜோலாா்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:40 pm

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன் என ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி உறுதி தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் கவிதா தண்டபாணி ஞாயிற்றுக்கிழமை ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட பாச்சல், புளியாங்குட்டை, ஜெய்பீம் நகா், வள்ளுவா் நகா், காந்திபுரம், அதன் சுற்றுப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: கடந்த 5 ஆண்டுகளில் நம்முடைய பகுதிக்கு திராவிட மாடல் ஆட்சியில் சாலைகள், பள்ளிக் கட்டடங்கள் உள்பட பல வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும், எனக்கு வாக்களித்து தோ்ந்தெடுத்ததால் நமது தொகுதி முழு வளா்ச்சிக்கும் பாடுபடுவேன். ஏலகிரி மலையை சிறந்த சுற்றுலாத்தளமாக்க நடவடிக்கை எடுப்பேன்.

மேலும், அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா், சாலை வசதிகள் மேம்படுத்துவேன் என்றாா். அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் பலா் உடன் இருந்தனா்.