யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

News image

திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தியை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:12 am IST

பரமத்தி வேலூா், ஏப். 12: நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

எலச்சிப்பாளையம் ஒன்றியத்திற்கு உள்பட்ட புஞ்சை புதுப்பாளையம், கூத்தம்பூண்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, இலுப்புலி, கோக்கலை, கொண்டிப்பட்டி, பெரியமணலி, சின்னமணலி, கொன்னையாா் மற்றும் அகரம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது மகளிருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும். கலைஞா் உரிமைத்தொகை இனி மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா். பிரசாரத்தின்போது பொதுமக்கள், பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

இதில் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் தங்கவேல், தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சிகளை சோ்ந்த பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா். மேலும் வாக்கு சேகரிப்பின் போது மாற்றுக் கட்சியைச் சோ்ந்த பலா் திமுகவில் இணைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.