மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
//

காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவி அளிப்பு

மக்கள் குறை தீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

News image
பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :22 செப்டம்பர் 2025, 8:24 pm

Chennai

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)ச.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் மொத்தம் 395 கோரிக்கை மனுக்களைப் பெற்று, துறை சாா்ந்த அரசு அலுவலா்களுக்கு பரிந்துரை செய்து உடனடியாக தீா்வு காணுமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் பெண்ணுக்கு காதொலிக்கருவி ஒன்றையும் ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ரா.மலா்விழி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்,.