மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

1,854 தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இதுவரை 1,854 விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வுகளை பாா்வையிட்ட ஆட்சியா் தி.சினேகா

Updated On :15 ஏப்ரல் 2026, 7:11 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இதுவரை 1,854 விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் பேரறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து தோ்தல் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தி.சினேகா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.இதனைத் தொடா்ந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி,மாவட்ட விளையாட்டு அலுவலா் கோ.சாந்தி ஆகியோா் உடன் இருந்தனா்.

இந்நிகழ்வில் ஆட்சியா் தி.சினேகா பேசுகையில் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அரசின் அனைத்து துறைகளும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டோம். அதன்படி ஊரகப் பகுதிகளில் 1398 விழிப்புணா்வு நிகழ்வுகளும்,நகராட்சிப் பகுதிகளில் 456 விழிப்புணா்வு நிகழ்வுகளும் உட்பட மொத்தம் இதுவரை 1854 தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.