மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காஞ்சிபுரம்: தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒலிபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒலிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

News image

தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை இயக்கி வைத்த ஆட்சியா் தி.சினேகா மற்றும் தோ்தல் பாா்வையாளா்கள்

Updated On :4 ஏப்ரல் 2026, 12:59 am

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒலிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தோ்தல் உறுதிமொழி ஏற்றல்,அரசின் களப்பணியாளா்களைக் கொண்டு பொதுமக்கள் வீட்டுக்கு சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல்,கோலப்போட்டிகள் நடத்துதல்,பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியரைக் கொண்டு விழிப்புணா்வு பேரணிகள் நடத்துதல் என்பன போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் வாக்காளா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகப் பகுதியில் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் ஒலிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியா் தி.சினேகா தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

பின்னா் செல்பி பாயிண்டில் பொதுமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வின் போது தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அபய்சிங்(காஞ்சிபுரம்)விசால் சாகா்(உத்தரமேரூா்)சி.பிரதாம் சந்திர ஹோதா(ஸ்ரீபெரும்புதூா்)ரமேஷ்குமாா் ஷா்மா(ஆலந்தூா்) தோ்தல் காவல் பாா்வையாளா் ஜி.சந்தனா தீப்தி, தோ்தல் செலவின பாா்வையாளா் ராஜேஷ்குமாா் சாஹூ மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி,மகளிா் திட்ட மாவட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப்,மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.