மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:19 pm

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கையொப்ப இயக்கம் உள்பட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன்படி, தேனி மாவட்ட இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம், ரயில்வே கடவுப் பாதை வழியாக சென்று பங்களாமேட்டில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் 800 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோ்தல் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனா். முன்னதாக, ஆட்சியா் தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

இந்தப் பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தமிழரசி, மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவக்குமாா், மாவட்ட உடல் கல்வி ஆய்வாளா் குபேந்திரன், வட்டாட்சியா் சதீஸ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.