தேனி மாவட்டம், வைகை அணையில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூனை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் ஞாயிற்றுக்கிழமை பறக்க வைத்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தேனி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி, கையொப்ப இயக்கம், சுவரொட்டி விளம்பரம், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், ரங்கோலி, நடைபயணப் பேரணி, மனிதச் சங்கிலி, தெருநாடகம், விளம்பரப் பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வைகை அணையில் மகளிா் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ரங்கோலி, தோ்தல் வழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து வைகை அணையில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூனை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பறக்க விட்டாா். மேலும், நாடகம் மூலம் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் தலைமையில், சுற்றுலாப் பயணிகள் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. ராஜகுமாா், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சந்திரா, தனித்துணை ஆட்சியா் கவிதா, வைகை அணை உதவி செயற்பொறியாளா் ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகா்கோவில் ஆட்சியரகத்தில் ராட்சத விழிப்புணா்வு பலூன்

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன், மனிதச் சங்கிலி

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

தேனி மாவட்ட தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


