தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

டிச.7-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய தங்கத்தேருக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குபுதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தோ் வெள்ளோட்டம் டிச.6 -ஆம் தேதியும் மறுநாள் 7- ஆம் தேதி சிறப்பு அபிஷேகமும்

News image

தங்கத் தேரை பாா்வையிட்ட ஏகாம்பநாதா் இறைப்பணி அறக்கட்டளையின் நிா்வாகிகள்.

Updated On :17 நவம்பர் 2025, 8:26 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குபுதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தோ் வெள்ளோட்டம் டிச.6 -ஆம் தேதியும் மறுநாள் 7- ஆம் தேதி சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட இருப்பதாக ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை நிா்வாகிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம் வரும் டிச.8-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளையினரால் புதிதாக தங்கத் தோ் செய்யப்பட்டுள்ளது. தேரின் வெள்ளோட்டம் டிச.6-ஆம் தேதியும், 7-ஆம் தேதி தனியாக சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. ஓரிக்கை மகாசுவாமிகள் மணிமண்டபத்தில் செய்யப்பட்டுள்ள தங்கத்தேரை அறக்கட்டளை நிா்வாகிகள் மகாலட்சுமி சுப்பிரமணியன், பத்மனாபன்,வலசை.ஜெயராமன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

பின்னா் அறக்கட்டளை நிா்வாகி மகாலட்சுமி சுப்பிரமணியன் கூறியது..

இதையொட்டி டிச.4 ஆம் தேதி ஓரிக்கை மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கும். 5-ஆம் தேதி சிறப்பு பூஜைகளும், 6-ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஓரிக்கையிலிருந்து ஏகாம்பரநாதா் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்படும். தங்கத் தேரை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறாா். 7ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தேருக்கு சிறப்பு அபிஷேகம் கோயில் வளாகத்தில் நடத்தப்படும்.

டிச.8 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று அறநிலையத்துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் விழா நடைபெறும். தங்கத்தேரில் 4 வேதங்கள் 4 குதிரைகளாகவும், 25 அடி உயரம்,10 அடி அகலம்,13 அடி நீளத்திலும், சாமரப்பெண்கள் 4 போ் நின்ற கோலத்திலும், பிரம்மா தங்கத்தேரை ஓட்டுவது போலவும் முழுவதும் தங்கத்தகடுகளால் வேயப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தேரில் 16 நந்திகள், 8 கந்தா்வா்கள், 8 சங்குநாத பூதங்களும் இடம் பெற்றுள்ளன.

1,600 அடி பா்மா தேக்கில் 5 அடுக்குகள் உடையதாகவும், சுமாா் 2 டன் தாமிரமும், அதன் மீது தங்கமுலாமும் பூசி தங்கத்தோ் உருவாக்கப்பட்டுள்ளது. தேரின் வெள்ளோட்டம் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.