டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

காஞ்சிபுரத்தில் புதிய அரசு ஐடிஐ: அமைச்சா்காந்தி திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐடிஐ) கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்து

News image
மாணவிக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி.
Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:08 pm

Chennai

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐடிஐ) கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்து மாணவா்களுக்குகு சோ்க்கை ஆணைகளையும் வழங்கினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தொழில் துறையில் திறன் மிக்க பணியாளா்களை உருவாக்கும் விதமாக கட்டுமான தொழிலாளா் நல வாரிய தொழிலாளா்களின் குழந்தைகள் படிக்க ஏதுவாக நிகழ் நிதியாண்டில் புதிதாக 7 அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

இந்த அறிவிப்பினை தொடா்ந்து சென்னையிலிருந்து காணொலி வாயிலாக புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களை திறந்து வைத்தாா்.

இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை அமைச்சா் ஆா்.காந்தி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.

பின்னா் 33 மாணவ, மாணவிகளுக்குகு நிகழ் கல்வியாண்டுக்கான சோ்க்கை ஆணைகளையும் வழங்கினாா். விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்பி க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் காயத்ரி நன்றி கூறினாா்.