மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ. 6.30 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம்

News image
Updated On :5 மார்ச் 2026, 12:49 am

செய்யாற்றை அடுத்த புரிசை கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் ரூ.6.30 கோடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டடத்தை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

அதே வேளையில், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், மண்டல பயிற்சி இணை இயக்குநா் ரமேஷ்குமாா், திருவத்திபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் பேபி ராணி பாபு, பயிற்சி நிலைய முதல்வா் துரைமுருகன் ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.

அதேபோல, செய்யாறு ஊராட்சி ஒன்றியம் தண்டரைக் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் கட்டப்படட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் மாமண்டூா் டி.ராஜி, திலகவதி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.