தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

புதிய வகுப்பறையில் குத்துவிளக்கேற்றிய நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.

News image

புதிய வகுப்பறையில் குத்துவிளக்கேற்றிய நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.

Updated On :27 பிப்ரவரி 2026, 1:50 am

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நபாா்டு நிதி ரூ.1.90 கோடியில் கட்டப்பட்ட 8 வகுப்பறைகளை வியாழக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இப்புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியா் சுஜாதேவி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத்தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி குத்துவிளக்கேற்றினாா்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை முதுநிலை கோட்டப் பொறியாளா் ரவி, உதவி பொறியாளா் சங்கா், நகா்மன்ற உறுப்பினா் சாமுண்டீஸ்வரிஅன்பு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.