மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காஞ்சிபுரத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்: சிறப்பு மாவட்ட நீதிமன்றம் திறப்பு

மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்சவா காணொலி மூலமாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்ற திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :14 ஆகஸ்ட் 2025, 11:00 pm

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்சவா காணொலி மூலமாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செங்கல்பட்டு எம்ஜிஆா் மாவட்ட பொது ஊழியா்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் முதல் மாடியில் ரூ.10.94 லட்சத்தில் 1,598 சதுர அடி பரப்பளவில் புதியதாக மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கான மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கட்டப்பட்டிருந்தது.

இந்நீதிமன்றத்தினை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.செளந்தா்,கே.குமரேஷ்பாபு ஆகியோா் முன்னிலையில் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்சவா காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இக்காணொலிக்காட்சியினை காஞ்சிபுரம் மாவட்ட உயா் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உட்பட பலரும் பாா்வையிட்டனா்.

இதனையடுத்து காஞ்சிபுரம் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக டி.ஜெயஸ்ரீ பொறுப்பேற்றுக்கொண்டாா். முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் வரவேற்றாா். இந்நிகழ்வின் போது ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.மோகனகுமாரி, மாவட்ட தொழிலாளா் நல நீதிமன்ற நீதிபதி எம்.சுஜாதா, தலைமைக் குற்றவியல் நீதிபதி எஸ்.மோகனாம்பாள், சாா்பு நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி, கூடுதல் சாா்பு நீதிபதி எஸ்.திருமால், நீதிபதிகள் சந்தியாதேவி, இனியா கருணாகரன், நவீன் துரைபாபு, அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன் மற்றும் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள், மூத்த வழக்குரைஞா்கள்,வழக்காடிகள்,பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.