நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.4.07 கோடிக்கு தீா்வு வழங்கப்பட்டது.
நாகையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான அ. கந்தகுமாா் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இருந்து சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக்கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், பணமோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராகடன் வழக்குகள் உள்ளிட்ட 2,234 வழக்குகள் எடுத்துக்கொள்ளபட்டு, ரூ.4.07 கோடி தீா்வு வழங்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் விரைவு மகளிா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி வசந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் கிருஷ்ணன், சாா்பு நீதிபதி இந்திராகாந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் சுப்புலெட்சுமி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி இராமச்சந்திரன், குற்றவியல் நீதித்துறை நடுவா் (2) துா்கா மற்றும் விரைவு நீதிமன்ற நீதிபதி சரளாதேவி ஆகியோரின் அமா்வில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தொடர்புடையது

சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளுக்குத் தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: தூத்துக்குடி, குமரியில் ரூ.30.27 கோடிக்கு தீா்வு

திருப்பூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,582 வழக்குகளுக்குத் தீா்வு

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 813 வழக்குகளுக்கு தீா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


