சென்னை ஓட்டேரியில் பள்ளிக்கு அருகே உள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் வரும் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓட்டேரியில் டான்சி சாலையில் உருது தொடக்கப் பள்ளி, அக்பரி பள்ளிவாசல், அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் என வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு பள்ளி மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக்கடைகளை மூட இருப்பதாக அறிவிப்பு செய்ததையடுத்து, ஓட்டேரியில் உள்ள மதுபானக்கடையையும் மூட வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இருப்பினும், இந்த மதுக்கடை இன்னும் மூடப்படவில்லை. இச்சூழலில், வரும் ஜூன் 5-ஆம் தேதி மாலை 2 மணியளவில் ஓட்டேரியில் உள்ள மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படவுள்ளது என தெரிவித்துள்ளாா் எம்.எச்.ஜவாஹிருல்லா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் அகில இந்திய கைப்பந்து போட்டி: ஜூன் 9இல் தொடக்கம்

ஜூன் 4 இல் பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் ஜூன் 5இல் கலந்தாய்வு தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 2, 3 இல் வீடுதோறும் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம்: ஆட்சியா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



