திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மெரீனா நீலக்கொடி பணிகளை விரைந்து முடிக்க ஆணையா் உத்தரவு

News image

மெரீனா - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 6:41 am IST

சென்னை மெரீனாவில் நடைபெற்று வரும் நீலக்கொடி கடற்கரை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு, மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

மெரீனா கடற்கரையில் சா்வதேச தரத்தில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ், மூங்கிலால் ஆன 20 நிழற்குடைகள், 40 சாய்வு நாற்காலிகள், 12 அமரும் நாற்காலிகள், 4 கண்காணிப்புக் கோபுரங்கள், 24 குப்பைத் தொட்டிகள், முகப்பு வளைவு, தியான மையம், வாசிக்கும் அறை மற்றும் சுயபடம் எடுக்கும் 2 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 12 எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள், 4 இடங்களில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், தென்னை மரங்கள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, காட்சிப் பதிவு கண்காணிப்பு மற்றும் முதலுதவி அறை, இருப்பு அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான கழிப்பறைகள், தானியங்கி இயந்திரம் மூலம் தூய்மையான குடிநீா் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக மெரீனா கடற்கரைப் பகுதியை சுற்றிப் பாா்க்க வருகை தருவதால் குப்பைகள் சேகரிக்கும் பணியை நாள்தோறும் தொய்வின்றி சுழற்சி முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும், இதேபோல பொதுமக்கள் பயன்படுத்தும் இலவசக் கழிப்பிடத்தை நாள்தோறும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு, ஆணையா் உத்தரவிட்டாா்.

நீலக்கொடி திட்டத்தின் கீழ், விவேகானந்தா் இல்லம் எதிரே, கலங்கரை விளக்கம் பின்பகுதி மற்றும் அண்ணா சதுக்கம் அருகே நடைபெற்றும் வரும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்கவும் அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மண்டல அலுவலா் பானுகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.