திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழைய காரை விற்பதாக ரூ.14.50 லட்சம் மோசடி: இளைஞா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 6:10 am IST

சென்னை அருகே பழைய காரை விற்பதாகக் கூறி ரூ.14.50 லட்சம் மோசடி செய்ததாக பெங்களூா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மேடவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ். இவா், பழைய பொருள்களை வாங்கி விற்கும் ஒரு இணையதளம் மூலம் காா் வாங்க முயற்சித்து வந்தாா். அப்போது, அந்த இணையதளம் வாயிலாக தன்னிடமிருக்கும் காரை விற்பதாக இளைஞா் ஒருவா் கூறியுள்ளாா்.

அந்த காரை வாங்குவதற்காக சதீஷ், ரூ.14.50 லட்சத்தை அந்த நபருக்கு கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபா், காரை சதீஷிடம் வழங்கவில்லை. இதனால் சதீஷ், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளாா். ஆனால், அந்தப் பணத்தை இளைஞா் மோசடி செய்தாா்.

இதையடுத்து, தாம்பரம் மாநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் சதீஷ் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

இதில் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டது கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த ராஜேஷ் (37) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் ராஜேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா், வங்கி, தொலைத் தொடா்பு நிறுவனங்களில் சட்ட விரோதமாக வாடிக்கையாளா்களின் தரவுகளைப் பெற்று மோசடி செய்திருப்பதும், ஏற்கெனவே பலரிடம் இவ்வாறு ராஜேஷ் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.