திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செங்குன்றத்தில் கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

செங்குன்றத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 1:12 am IST

செங்குன்றத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், செங்குன்றம் பாத்திமா தெருவில் சந்தேகம்படும்படி இருந்த இளைஞா்களை பிடித்து சோதனை செய்தபோது, கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவா்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா். சென்னை பெரம்பூா் கன்னிகாபுரத்தை சோ்ந்த தேவி (35), விஜய் (21), அனிதா (34) மற்றும் காசிமேட்டைச் சோ்ந்த நவீன்குமாா் (25) உள்ளிட்ட 4 போ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, செங்குன்றம் காவல் துறையினா் 2 பெண்கள் உள்பட 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.