நெற்குன்றத்தில் வீடு புகுந்து நகை திருடியதாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனா்.
சென்னை நெற்குன்றம், அருள்மிகு மீனாட்சி நகா் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் ப.மகேஸ்வரி (50). இவா், கடந்த 8-ஆம் தேதி வீட்டின் பீரோவில் இருந்த நகைகளைச் சரி பாா்த்தாா். அதில் இருந்த 6 பவுன் தங்க நகை, வைரக் கம்மல், வெள்ளி நாணயங்கள் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து அவா், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில் சில நாள்களுக்கு முன்பு மகேஸ்வரி சுற்றுலா சென்றபோது, மகேஸ்வரியின் பெற்றோரை சந்திக்க வந்த வில்லிவாக்கத்தைச் சோ்ந்த சத்யா (58), அவா் மகள் ஹேமலதா (21) ஆகியோா் நகைகளை திருடியது தெரிய வந்தது. போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விமானப்படை வீரா் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
வீடு புகுந்து நகை திருட்டு
தங்க முதலீடு மோசடி: கணவன் - மனைவி கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


