திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விமானப்படை வீரா் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:59 am IST

ராமேசுவரத்தில் முன்னாள் விமானப்படை வீரா் வீட்டின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்துப் புகுந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வால்அறுந்த அனுமாா் கோயில் அருகே முன்னாள் விமானப்படை வீரா் பிரபா சங்கா் வீடு உள்ளது. இவா் வெளியூா் சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே வாடகைக்கு குடியிருந்த நபா், இவரது வீடு திறந்து கிடப்பதாக பிரபா சங்கருக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, பிரபாசங்கா் வெளியூரில் இருந்த நிலையில், ராமேசுவரம் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் சென்று வீட்டை ஆய்வு செய்ததில் வீட்டின் உள்ளே இரு அறைகளில் இருந்த நான்கு பிரோக்களை மா்ம நபா்கள் உடைத்து 5 கிலோ வெள்ளி பொருள்கள், 4.5 பவுன் தங்க நகைகள், 20 விலையுா்ந்த பட்டுப் புடவைகள், நிலப் பத்திரங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. பிரபாசங்கா் வீடு திரும்பி வந்து அளித்த புகாரின் பேரில் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.