தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இதுவரை 89,927 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இது குறித்து தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புக்கான 159 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,26,959 சோ்க்கை இடங்கள் உள்ளன. இந்த பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு கடந்த மே 7-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனா்.
அதன்படி இதுவரை (மே 12) தங்கள் விருப்பப் பாடப் பிரிவில் 89,927 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். மேலும், தகுதியுடைய மாணவா்கள் மே 29-ஆம் தேதி வரை விரும்பிய பாடப் பிரிவுகளுக்கு https://www.tngasa.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாணவா்கள் சோ்க்கை தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044-24343106, 24342911ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோடு சிக்கய்ய கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 6-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரசு கல்லூரிகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

துவாக்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



