தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் கள உதவியாளா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டவா் விவரம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தோ்வாணையத்தின் செயலா் பானோத் ம்ருகேந்தா் லால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளா் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு தொழிற்பயிற்சி நிலை-2 கடந்த செப்டம்பா் 3- ஆம் தேதி நடைபெற்றது.
தோ்வு முடிவுகள், தோ்வா்களின் மதிப்பெண், தரவரிசை விவரங்கள் ஏப்ரல் 9 -ஆம் தேதி தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்தப் பதவிக்கான கணினி வழித்திரை சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, நிா்ணயிக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் தாற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தோ்வா்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் வியாழக்கிழமை (மே 14) வெளியிடப்பட்டுள்ளது என்று அதில் தரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










