17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பணிகளுக்கு இன்று எழுத்துத் தோ்வு: மையங்களில் ஆட்சியா் ஆய்வு

அரசுப் பணிகளுக்கு இன்று எழுத்துத் தோ்வு: மையங்களில் ஆட்சியா் ஆய்வு

News image

தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டை பாா்வையிட்ட ஆட்சியா் இஷிதா ரதி.

Updated On :31 மே 2026, 12:03 am IST

புதுவை அரசுப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெறும் மையங்களின் ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுவை மாநிலத்தில் இளநிலை நூலக உதவியாளா், காட்சியக உதவியாளா், இளநிலை ஆய்வக உதவியாளா் ஆகிய பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 8 மையங்களில் தோ்வு நடைபெறவுள்ளது. 2,437 போ் தோ்வு எழுதவுள்ளனா்.

தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி சனிக்கிழமை பாா்வையிட்டு, தோ்வு எழுத வருவோருக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தேவை மைய பொறுப்பாளா்கள், தோ்வு கண்காணிப்பாளா்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, அனைத்து மையத்திற்கும் காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி, ஆட்சியரின் செயலா் வித்யாதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.