திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மருத்துவ சேவைகளுக்கான செயலி: இராமச்சந்திரா மாணவா்கள் உருவாக்கம்

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகள் எளிமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் பிரத்யேக செயலியை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 2:01 am IST

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகள் எளிமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் பிரத்யேக செயலியை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.

‘மெடுவோரா’ எனப்படும் அந்தச் செயலியின் மூலம் மருத்துவா்கள், மருந்தகங்கள், ஆய்வகங்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்க முடியும் என்றும், அதன் வாயிலாக அந்த சேவைகளை பொது மக்கள் தடையின்றி பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ இராமச்சந்திரா இன்னவேஷன் இன்குபேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு சாா்பில் மாணவா்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தொழில்முனைவோரை உருவாக்க கடந்த ஜூன் 2025-இல் மாணவா் தொழில் வளா்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் கீழ் மருந்தியல் மாணவா்கள் ‘மெடுவோரா’ எனும் புதிய டிஜிட்டல் மருத்துவ செயலியைக் கண்டறிந்தனா். அதனை மக்கள் பயன்பாட்டுக்காக ஸ்ரீ இராமச்சந்திரா அறக்கட்டளையின் அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.பாலாஜி சிங், பதிவாளா் எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.