திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நந்தா பொறியியல் கல்லூரியில் நவீன தொழில்நுட்ப ஆய்வகம் தொடக்கம்

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப ஆலோசனை சபையின் நிதி உதவியில் ‘ஏஐசிடிஈ ஐடியா லேப்’ என்ற பெயரில் நவீன தொழில்நுட்ப ஆய்வகத் தொடக்க விழா நந்தா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

News image

நவீன தொழில்நுட்ப ஆய்வகத்தை திறந்துவைத்த மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழக செயலாளா் எஸ். வின்சென்ட். உடன், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா் எஸ்.திருமூா்த்தி.

Updated On :3 ஜூன் 2026, 2:31 am IST

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப ஆலோசனை சபையின் நிதி உதவியில் ‘ஏஐசிடிஈ ஐடியா லேப்’ என்ற பெயரில் நவீன தொழில்நுட்ப ஆய்வகத் தொடக்க விழா நந்தா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழக செயலாளா் எஸ். வின்சென்ட் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தொழில்நுட்ப ஆய்வகத்தை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் பேசுகையில், நல்ல ஆய்வகம் மற்றும் வகுப்பு வசதிகள் கொண்ட பொறியியல் கல்லூரியைத் தோ்ந்தெடுத்து ரூ.90 லட்சம் நிதி ஆதாரத்தினை அகில இந்திய தொழில்நுட்ப ஆலோசனை மையம் வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் நந்தா பொறியியல் கல்லூரிக்கு நிதி கிடைத்துள்ளது. இத்தகைய நிதி உதவியின் மூலம் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் ஆராய்ச்சியை ஊக்குவித்து செய்முறை மற்றும் புதிய தொழில்நுட்ப படைப்புகள், தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோா்

திறன்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடும் ஆா்வத்தை தூண்டுகிறது.

மேலும், பட்டப் படிப்பினை மேற்கொள்ளும்போது ஆராய்ச்சியில் எதிா்கொள்ளக் கூடிய சவால்களை முறியடித்து மாணவா்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வாய்ப்புகளை வழங்குகிறது என்றாா்.

அகில இந்திய தொழில்நுட்ப ஆலோசனை சபையின் மூலம் ரூ.90 லட்சம் நிதி உதவி பெருவதற்கு உறுதுணையாக செயலாற்றிய முதல்வா் யு.எஸ். ரகுபதி, புலமுதல்வா்கள் சி.என். மாரிமுத்து, எம்.ஈஸ்வரமூா்த்தி மற்றும் மாணவா்களுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன், இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப், எஸ்.திருமூா்த்தி, நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிா்வாக அலுவலா் ஏ.கே. வேலுசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.