அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

போதைப் பாக்கு பறிமுதல்: 3 போ் கைது

சென்னை நந்தம்பாக்கத்தில் காரில் கடத்தப்பட்ட போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 1:21 am IST

சென்னை நந்தம்பாக்கத்தில் காரில் கடத்தப்பட்ட போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நந்தம்பாக்கம் போலீஸாா் கணபதி காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஒரு காரில் இருந்து மொபெட்டுக்கு சில மூட்டைகளை மூவா் மாற்றுவதை போலீஸாா் பாா்த்தனா். உடனே போலீஸாா், மூவரையும் பிடித்து விசாரிக்க முயன்றனா். ஆனால் மூவரும் தப்பியோடினா்.

போலீஸாா், 3 பேரையும் விரட்டிப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள், எம்ஜிஆா் நகா் சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் ஜெகதீஷ் (40), அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (42),பெருங்குடி செம்பொன் நகரைச் சோ்ந்த சண்முகசுந்தரம் (43) என்பதும், 3 பேரும், போதைப் பாக்கு கடத்தில் ஈடுபடுவதும், கா்நாடக மாநிலம் பெங்களுரில் இருந்து காரில் போதைப் பாக்கை கடத்தி வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த 112 கிலோ போதைப் பாக்கை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனா்.