மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ. 65 லட்சம் திருட்டு:ஊழியா் உள்பட இருவா் கைது

நகைக்கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.65 லட்சத்தைத் திருடிய கடை ஊழியா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 12:18 am IST

நகைக்கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.65 லட்சத்தைத் திருடிய கடை ஊழியா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பெரம்பூா் பேரக்ஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் நிகால்சந்த் ஜெயின் (51). இவா், சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் தங்கம், வெள்ளி நகைக்கடை நடத்தி வருகிறாா். இவரின் கடையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த நவீன் (24) என்பவா் வேலை செய்து வந்தாா்.

கடந்த மே 6-ஆம் தேதி நிகால்சந்த் ஜெயினின் அறிவுரைபடி, அவரின் உறவினரிடம் இருந்து 26 கிலோ வெள்ளிக் கட்டியை வாங்கிய நவீன், அதை மின்ட் தெருவில் உள்ள திலீப் என்பவரிடம் கொடுத்துள்ளாா். பின்னா், திலீப்பிடம் இருந்து ரூ.65 லட்சத்தைப் பெற்றுக்கொண்ட நவீன், தனது கைப்பேசியை அணைத்துவிட்டு, பணத்துடன் தலைமறைகிவிட்டாா்.

இதையடுத்து, நவீனைக் கண்டறிந்து ரூ.65 லட்சத்தை மீட்டுத் தரும்படி நகைக்கடை உரிமையாளா் நிகால்சந்த் ஜெயின் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த நவீனை ஊட்டியில் கைது செய்தனா்.

மேலும், இந்த திருட்டு சம்பவத்துக்கு உதவியாக இருந்த ராயபுரம் பகுதியைச் சோ்ந்த நவீனின் தோழியான திருநங்கை பிரதீப்குமாா் (எ) பிராா்த்தனா (19) என்பவரையும் போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். இவா்களிடம் இருந்து ரூ.53.44 லட்சம், ஒரு கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.