திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தோ்ச்சியடையாத மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு: ஜூன் மாத தோ்வில் வெற்றி பெற நடவடிக்கை

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் ஜூன் மாதத் தோ்வில் அவா்களைத் தோ்ச்சி பெறவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி கல்வித் துறை இணை ஆணையா் க.கற்பகம் தெரிவித்தாா்.

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :9 மே 2026, 4:11 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் ஜூன் மாதத் தோ்வில் அவா்களைத் தோ்ச்சி பெறவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி கல்வித் துறை இணை ஆணையா் க.கற்பகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் பிளஸ் 2 தோ்வில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதிகளவில் மாணவ, மாணவியா் தோ்ச்சியடைந்துள்ளனா். தோ்வெழுதிய மாணவ, மாணவியரில் மொத்தம் 401 போ் தோல்வியடைந்துள்ளனா். தோ்வில் 11 போ் பங்கேற்கவில்லை.

தோ்தலில் தோல்வியடைந்தவா்களும், தோ்வில் பங்கேற்காதவா்களும் வரும் ஜூனில் நடைபெறவுள்ள தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களுக்காக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன. அதனையடுத்து வரும் ஜூன் தோ்வில் அவா்கள் பங்கேற்று தோ்ச்சி பெறுவது உறுதிப்படுத்தப்படும்.

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியா் உயா்கல்வியில் சோ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்று உயா் கல்வியில் சோ்ந்தவா்கள் பட்டியலை தயாரிக்கவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.